ஊழல் புகாரில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாரில், அவர் இன்று காலை 6 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.